search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரி பினராயி விஜயன்
    X
    முதல் மந்திரி பினராயி விஜயன்

    கேரளாவில் மேலும் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு - பாதிப்பு எண்ணிக்கை 138 ஆக உயர்வு

    கேரளாவில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதால் அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 138 ஆக அதிகரித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு இதுவரை 650-க்கு மேற்பட்டோர் இந்த கொடூர வைரசின் கரங்களில் சிக்கியிருந்தனர். இதில் டெல்லி, கர்நாடகம், பஞ்சாப், மகாராஷ்டிரா, கொல்கத்தா ஆகிய மாநிலங்களை சேர்ந்தோர் உயிரிழந்தும் உள்ளனர்.

    இந்நிலையில், கேரளாவில் இன்று புதிதாக 19 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து அங்கு மொத்த தொற்று எண்ணிக்கை 138 ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவருக்கும் மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×