search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கேரளாவில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு - பாதிப்பு எண்ணிக்கை 118 ஆக உயர்வு

    கேரளாவில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதை தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    மனித சமூகத்துக்கே சவாலாக மாறியிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கணக்கை நாள்தோறும் பெருக்கி வருகிறது. இங்கு இதுவரை 562 பேர் இந்த கொடூர வைரசின் கரங்களில் சிக்கியிருந்தனர். இதில் டெல்லி, கர்நாடகம், பஞ்சாப், மகாராஷ்டிரா, கொல்கத்தா ஆகிய மாநிலங்களை சேர்ந்தோர் உயிரிழந்தும் உள்ளனர்.

    இந்நிலையில், கேரளாவில் இன்று புதிதாக 9 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து அங்கு மொத்த தொற்று எண்ணிக்கை 118 ஆக அதிகரித்து விட்டது. தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவருக்கும் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×