search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன்
    X
    கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன்

    கேரளாவில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று

    கேரளா மாநிலத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 428 ஆக உயர்ந்துள்ளது. இன்று மாலை நிலவரப்படி சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    கொரோனா சிறப்பு சிகிச்சை பகுதி

    இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்ததாகவும் இவர்களில் 4 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியதால் தற்போதைய நிலவரப்படி அங்கு 91 பேர் சிறப்பு கண்காணிப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்ட 28 பேரில் 19 பேர் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், 5 பேர் கன்னூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், 2  பேர் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், மற்ற இருவர் பத்தினம்திட்டா மற்றும் திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
    Next Story
    ×