என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தென்கொரியா-ஜப்பான் நாட்டினர் இந்தியாவுக்கு வர தடை
டெல்லி:
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது தென்கொரியா, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட 37 நாடுகளுக்கு பரவி உள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக தென்கொரியாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 13 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.
அதே போல ஜப்பானில் கடலில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில் இருந்த பயணிகள் 650 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் ஜப்பான் நாட்டிலும் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜப்பான், தென்கொரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக இந்திய தூதரகம் கூறும்போது, “ஜப்பான்-தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து அந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியா வந்த பிறகு விசா வழங்கும் நடைமுறைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது” என்று கூறியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்