என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் சோனியாவுடன் சித்து சந்திப்பு - பிரியங்காவையும் சந்தித்தார்
Byமாலை மலர்27 Feb 2020 11:45 PM GMT (Updated: 27 Feb 2020 11:45 PM GMT)
முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவையும், பொதுச்செயலாளர் பிரியங்காவையும் சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:
பஞ்சாப் மாநில காங்கிரசின் முன்னணி தலைவராக இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, சமீப காலமாக மாநில முதல்-மந்திரி அமரீந்தர் சிங் மீது அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. மாநில மந்திரியாக இருந்த அவர் பாராளுமன்ற தேர்தலுக்குப்பிறகு தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இந்த நிலையில் அவர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவையும், பொதுச்செயலாளர் பிரியங்காவையும் சந்தித்து பேசியதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்படி சந்திப்புகள் கடந்த 25 மற்றும் 26-ந் தேதிகளில் நடந்ததாக குறிப்பிட்டு உள்ளார்.
இந்த சந்திப்பின்போது, பஞ்சாப் அரசியல் சூழல் குறித்தும், காங்கிரசை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு வருவதற்கு சில செயல் திட்டங்களையும் எடுத்துரைத்ததாக குறிப்பிட்டு உள்ள சித்து, அவற்றை சோனியாவும், பிரியங்காவும் அமைதியாக கேட்டுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநில காங்கிரசின் முன்னணி தலைவராக இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, சமீப காலமாக மாநில முதல்-மந்திரி அமரீந்தர் சிங் மீது அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. மாநில மந்திரியாக இருந்த அவர் பாராளுமன்ற தேர்தலுக்குப்பிறகு தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இந்த நிலையில் அவர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவையும், பொதுச்செயலாளர் பிரியங்காவையும் சந்தித்து பேசியதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்படி சந்திப்புகள் கடந்த 25 மற்றும் 26-ந் தேதிகளில் நடந்ததாக குறிப்பிட்டு உள்ளார்.
இந்த சந்திப்பின்போது, பஞ்சாப் அரசியல் சூழல் குறித்தும், காங்கிரசை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு வருவதற்கு சில செயல் திட்டங்களையும் எடுத்துரைத்ததாக குறிப்பிட்டு உள்ள சித்து, அவற்றை சோனியாவும், பிரியங்காவும் அமைதியாக கேட்டுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X