என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி வன்முறை : தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் டெல்லி துணை ஆணையர் அவசர ஆலோசனை
Byமாலை மலர்25 Feb 2020 8:20 PM GMT (Updated: 25 Feb 2020 8:20 PM GMT)
டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வடகிழக்கு டெல்லியின் துணை ஆணையருடன் இன்று அவரசர ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:
குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது.
வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே நேற்றுவரை நடந்த மோதல்களில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 130-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லி நிலவரம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வடகிழக்கு டெல்லியின் துணை ஆணையர் அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது வன்முறையை கட்டுப்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது.
இதற்கிடையில், வடகிழக்கு டெல்லியின் முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X