என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரன்வேயில் குறுக்கே வந்த ஜீப்... அவசரமாக டேக் ஆப் செய்ததால் சேதமடைந்த ஏர் இந்தியா விமானம்
Byமாலை மலர்15 Feb 2020 10:11 AM GMT (Updated: 15 Feb 2020 10:11 AM GMT)
புனே விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் புறப்பட்டபோது, ஓடுபாதையில் ஜீப் மற்றும் ஒரு நபர் குறுக்கே வந்ததால் அவசரமாக டேக் ஆப் செய்யப்பட்டது.
புதுடெல்லி:
புனே விமான நிலையத்தில் இருந்து இன்று காலை புதுடெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. டேக் ஆப் செய்வதற்காக ஒடுபாதையில் சுமார் 222 கிமீ வேகத்தில் சென்றது. அப்போது, திடீரென ஓடுபாதையில் ஒரு ஜீப் மற்றும் ஒரு நபர் வந்ததை பைலட்டுகள் கவனித்தனர்.
இதனால் பைலட்டுகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், ஜீப் மற்றும் அந்த நபர் மீது மோதுவதை தவிர்க்க, விமானத்தை அவசரமாக டேக் ஆப் செய்தனர்.
இதனால் விமானத்தின் பின்பகுதி ஓடுதளத்தில் தீப்பொறி பறக்க உரசியபடி உயரே எழுந்து பறந்தது. இதில் விமானம் லேசாக சேதமடைந்தது. எனினும், தொடர்ந்து விமானத்தை செலுத்திய பைலட்டுகள், டெல்லியில் பாதுகாப்பாக தரையிறக்கினர். அத்துடன் அந்த விமானத்தின் சேவை நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரை (சிவிஆர்) விமானத்தில் இருந்து எடுத்து ஆய்வுக்கு அனுப்பும் படி ஏர் இந்தியா நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X