search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீயை அணைத்து கட்டிடத்தை குளிர்விக்கும் பணி
    X
    தீயை அணைத்து கட்டிடத்தை குளிர்விக்கும் பணி

    அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து- 7 தீயணைப்பு வீரர்கள் படுகாயம்

    மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் பிடித்த தீயை அணைக்கும் பணியின்போது 7 தீயணைப்பு வீரர்கள் பலத்த காயமடைந்தனர்.
    தானே:

    மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் சீவுட்ஸ் பகுதியில் உள்ள 21 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பயங்கர தீ  விபத்து ஏற்பட்டது. 20வது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் இந்த  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

    இதனால் அந்த தளத்தில் தீப்பற்றி எரிந்தது. பின்னர், அதற்கு மேல் உள்ள தளத்திற்கும் தீ பரவியது. இதனால், அங்கு வசித்தவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர்.

    அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளம் தீப்பற்றி எரியும் காட்சி

    தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று கடுமையாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அந்த கட்டிடத்தை குளிர்விக்கும் பணி நடைபெற்றது.

    உயிரைப் பொருட்படுத்தாமல் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டபோது, 7 தீயணைப்பு வீரர்களுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    Next Story
    ×