search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஏப்ரல் முதல் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் வரை உயரும்

    தூய்மையான எரிபொருளுக்கு மாறுவதால் ஏப்ரல் முதல் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் பயன்படுத்தும் வாகனங்களால் வெளியேற்றப்படும் புகையே காற்று மாசுபடுவதற்கு முக்கிய காரணம். எனவே வாகனங்களில் வெளியேறும் புகையை குறைக்கும் விதத்தில் தூய்மையான எரிபொருளுக்கு இந்தியா மாறுகிறது.

     இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் சஞ்சீவ் சிங் கூறும்போது, “தற்போது பி.எஸ்.-4 ரக எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. ஏப்ரல் 1-ந் தேதிக்குள் நாடு முழுவதும் 100 சதவீதம் பி.எஸ்.-6 ரக பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளோம். இதன் காரணமாக ஏப்ரல் முதல் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 50 பைசா முதல் ஒரு ரூபாய் வரை அதிகரிக்கும்” என்றார்.
    Next Story
    ×