என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்கி மோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்
Byமாலை மலர்21 Jan 2020 8:07 PM GMT (Updated: 21 Jan 2020 8:07 PM GMT)
வங்கி மோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் பறிமுதல் செய்யப்பட்ட அசையும் சொத்துகளில் சிலவற்றை ஏலம் விட அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி:
பஞ்சாப் நேஷனல் வங்கியை ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த வழக்கில் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி குற்றம் சாட்டப்பட்டுள்ளார். லண்டனுக்கு தப்பிச்சென்ற அவர், கைது செய்யப்பட்டு, லண்டன் சிறையில் உள்ளார்.
இதற்கிடையே, பறிமுதல் செய்யப்பட்ட அவரது அசையும் சொத்துகளில் சிலவற்றை ஏலம் விட அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மும்பையை சேர்ந்த ‘சப்ரான்ஆர்ட்‘ என்ற பிரபல ஏல நிறுவனத்தில் ஏலம் நடக்கிறது.
2 கட்டங்களாக ஏலம் நடக்கிறது. முதலில், பிப்ரவரி 27-ந் தேதி மும்பையில் நேரடியாகவும், மார்ச் 3 மற்றும் 4-ந் தேதிகளில் ஆன்லைன் மூலமாகவும் ஏலம் நடைபெறும். இந்த ஏலங்களில், நவீன, சமகால இந்திய கலைஞர்களின் 15 கலைப்பொருட்கள், பிரபல ஓவியர் எம்.எப்.உசைனின் ‘மகாபாரதம்‘ தொடரின் ஓவியங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 கோடி இருக்கும்.
அத்துடன், விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள், கைப்பைகள், கார்கள் ஆகியவையும் ஏலம் விடப்படுகின்றன.
பஞ்சாப் நேஷனல் வங்கியை ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த வழக்கில் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி குற்றம் சாட்டப்பட்டுள்ளார். லண்டனுக்கு தப்பிச்சென்ற அவர், கைது செய்யப்பட்டு, லண்டன் சிறையில் உள்ளார்.
இதற்கிடையே, பறிமுதல் செய்யப்பட்ட அவரது அசையும் சொத்துகளில் சிலவற்றை ஏலம் விட அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மும்பையை சேர்ந்த ‘சப்ரான்ஆர்ட்‘ என்ற பிரபல ஏல நிறுவனத்தில் ஏலம் நடக்கிறது.
2 கட்டங்களாக ஏலம் நடக்கிறது. முதலில், பிப்ரவரி 27-ந் தேதி மும்பையில் நேரடியாகவும், மார்ச் 3 மற்றும் 4-ந் தேதிகளில் ஆன்லைன் மூலமாகவும் ஏலம் நடைபெறும். இந்த ஏலங்களில், நவீன, சமகால இந்திய கலைஞர்களின் 15 கலைப்பொருட்கள், பிரபல ஓவியர் எம்.எப்.உசைனின் ‘மகாபாரதம்‘ தொடரின் ஓவியங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 கோடி இருக்கும்.
அத்துடன், விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள், கைப்பைகள், கார்கள் ஆகியவையும் ஏலம் விடப்படுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X