search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்துக்கள் ஏலம்"

    பாகிஸ்தான் முன்னாள் நிதி மந்திரி இஷாக் தர்ரின் வங்கிக்கணக்குகளை முடக்கவும், அவரது சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கி நீதிபதி முகமது பஷீர் நேற்று தீர்ப்பு அளித்தார். #Pakistan #FormerFinanceMinister #IshaqDar
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது, நிதி மந்திரி பதவி வகித்தவர் இஷாக் தர் (வயது 67). இவர் ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் சிக்கினார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இவர் மீது தேசிய பொறுப்புடைமை அமைப்பு 4 ஊழல் வழக்குகளை பதிவு செய்துள்ளது. இவர் தலைமறைவாக உள்ளார். இவரது வங்கிக்கணக்குகளை முடக்க வேண்டும், சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரி இஸ்லாமாபாத் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் தேசிய பொறுப்புடைமை அமைப்பு மனு தாக்கல் செய்தது.



    இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி முகமது பஷீர், அதன் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

    இந்த நிலையில் இஷாக் தர்ரின் வங்கிக்கணக்குகளை முடக்கவும், அவரது சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கி நீதிபதி முகமது பஷீர் நேற்று தீர்ப்பு அளித்தார். ஏலத்தை நடத்த வேண்டிய பொறுப்பினை பஞ்சாப் மாகாண அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    லாகூர், இஸ்லாமாபாத் நகரங்களில் உள்ள இஷாக் தர்ரின் அசையும் சொத்துக்களையும், அசையா சொத்துக்களையும் தேசிய பொறுப்புடைமை அமைப்பு ஏற்கனவே முடக்கி வைத்துள்ளது நினைவுகூரத்தக்கது.  #Pakistan #FormerFinanceMinister #IshaqDar
    மும்பை குண்டுவெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிமின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வரும் நிலையில் அவரது தாயின் நினைவாக கட்டிய 3 மாடி வீடு ஏலம் விடப்படுகிறது. #dawoodibrahim #Property
    மும்பை:

    மும்பை குண்டுவெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் இந்தியாவில் இருந்து தப்பி பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கிறான். அவனுக்கு 28 ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசாங்கம் அடைக்கலம் கொடுத்து இருக்கிறது.

    தாவூத் இப்ராகிம்மை இந்தியா கொண்டுவர மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தும் பாகிஸ்தான் அரசு தங்களிடம் தாவுத் இப்ராகிம் இல்லை என மறுத்துள்ளது.

    இதற்கிடையே மும்பையில் உள்ள தாவூத் இப்ராகிமின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அந்தச் சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் இந்து மகாசபா வக்கீல் ஒருவர் மனுதாக்கல் செய்தார்.



    இந்த மனுமீது நீதிபதிகள் விசாரணை நடத்தி தாவூத் இப்ராகிம் சொத்துக்களை ஏலம்விட உத்தரவிட்டனர். அதன்படி தாவூத் இப்ராகிம் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு வருகிறது. தாவூத் பயன்படுத்திய கார்கள் சில வகையான கட்டிடங்கள் ஏலம்விடப்பட்டன.

    மும்பையின் பாக்மோ டியா தெருவில் தாவூத் இப்ராகிம்க்கு சொந்தமான 3 மாடிக்கட்டிடம் உள்ளது. இங்குதான் தாவூத் இப்ராகிமின் தாயார் அமினா பி வசித்து வந்தார். இதனால் தாயாரின் நினைவாக அந்த கட்டிடத்துக்கு அமினா பி-என்ற பெயரை சூட்டியுள்ளான். தனது தாயை பொக்கி‌ஷமாக பாதுகாத்து வந்தான்.

    இந்த கட்டிடம் அடுத்த கட்டமாக ஏலத்துக்கு வருகிறது. இந்த கட்டிடத்தின் குறைந்தபட்ச ஏலத் தொகையாக ரூ.79.43 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஏலத்தில் கலந்துகொள்வோர் ரூ.25 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    வருகிற 31-ந்தேதி காலை யஷ்வந்த் ராவ் சவான் கலாச்சார மைய அரங்கத்தில் நடைபெறுகிறது.

    தற்போது ஏலத்துக்கு வந்த கட்டிடத்தின் எதிரே தம்பர்வாலா கட்டிடம் உள்ளது. இதில் தாவூத் இப்ராகிமின் சகோதரர் இக்பால் கஸ்கர் வசித்து வந்தார். எதிரில் உள்ள கட்டிடம் ஏலத்துக்கு வருவதால் இக்பால் கஸ்கக் மும்பை நாக்பாடாலில் வசிக்கும் சகோதரி ஹசீனா பார்க்கரின் வீட்டுக்கு மாறிவிட்டார்.

    இக்பால் இந்த ஆண்டு தொடக்கத்தில் பணம் பறிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.#dawoodibrahim #Property
    ×