search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி, ராகுல் காந்தி
    X
    பிரதமர் மோடி, ராகுல் காந்தி

    மோடிக்கு ராகுல் இணையாக முடியாது -வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா பேச்சு

    ஐந்தாம் தலைமுறையான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அரசியலில் கடின உழைப்பாளியான பிரதமர் மோடிக்கு இணையாக ஒரு போதும் வாய்ப்பில்லை என கேரள வரலாற்றாசிரியர் தெரிவித்துள்ளார்.
    கோழிக்கோடு: 

    2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. பிரதமர்  நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானார். முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தோல்வியை தழுவியது. அக்கட்சியின் அப்போதைய  தலைவரான ராகுல் காந்தி கேரளா மாநிலத்தின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார். ஆனால்  கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அரசியலில் கடின உழைப்பாளியான பிரதமர் மோடிக்கு இணையாக ஒரு போதும்  வாய்ப்பில்லை என கேரளாவைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார். 

    கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் நடைபெற்ற கேரளா இலக்கிய விழாவில் பேசிய குஹா, ‘சுதந்திர போராட்டத்தின் போது  மிகப்பெரிய காங்கிரஸ் கட்சி ஒரு குடும்ப நிறுவனமாக மாறியதே, தற்போது இந்தியாவில் இந்துத்வாவும், போர்க்குணமும் தலைதூக்க  காரணமாகும். ராகுல் காந்தி ஒரு கண்ணியமான மனிதர். தனிப்பட்ட முறையில் அவர் மீது எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை.   

    ராமச்சந்திர குஹா    

    கேரள மக்களே, நீங்கள் இந்தியாவுக்காக பல அற்புதமான காரியங்களைச் செய்துள்ளீர்கள், ஆனால் நீங்கள் செய்த பேரழிவு  காரியங்களில் ஒன்று ராகுல் காந்தியை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்தது ஆகும். 2024ம் ஆண்டும் நீங்கள் ராகுல் காந்தியை  தேர்ந்தெடுத்தால் அது பிரதமர் மோடிக்கே நன்மையாக முடியும். பிரதமர் மோடி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தை ஆண்டுள்ளார்.  ராகுலைப் போல விடுமுறையை கழிக்க ஐரோப்பா செல்பவர் அல்ல மோடி. மிகுந்த அரசியல் அனுபவம் உடைய பிரதமர் மோடிக்கு  இணையாக ராகுல் காந்தி ஒருபோதும் வரமுடியாது.’ என கூறினார். 
    Next Story
    ×