என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோட்சேவை தேசபக்தர் என்று பேசிய விவகாரம்- மன்னிப்பு கோரினார் பிரக்யா சிங்
Byமாலை மலர்29 Nov 2019 7:28 AM GMT (Updated: 29 Nov 2019 7:28 AM GMT)
கோட்சேவை தேசபக்தர் என்று பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிரக்யா சிங் தாக்கூர் மன்னிப்பு கோரினார்.
புதுடெல்லி:
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர். இவர் போபால் தொகுதி பா.ஜனதா எம்.பி.யாக இருக்கிறார். நேற்று முன்தினம் பாராளுமன்ற மக்களவையில், பிரக்யா சிங் குறுக்கிட்டு பேசுகையில், நாதுராம் கோட்சேவை ‘தேச பக்தர்‘ என்று புகழ்ந்தார். அவரது கருத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்தன.
நேற்றும் அவரது கருத்துக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளித்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது, கோட்சேவை தேச பக்தர் என்று கூறுவதை கண்டிப்பதாக கூறினார். அத்துடன், பிரக்யா சிங் பாதுகாப்பு அமைச்சகத்துக்கான பாராளுமன்ற ஆலோசனை குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், கோட்சே குறித்து தெரிவித்த கருத்துக்கு பிரக்யா சிங் தாக்கூர் இன்று மக்களவையில் மன்னிப்பு கோரினார். கோட்சேவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய அவர், ‘நான் தெரிவித்த கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X