என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கண்ணூர் அருகே மனைவியை கொன்று நாடகமாடிய முதியவர் போலீசுக்கு பயந்து தற்கொலை
Byமாலை மலர்18 Nov 2019 12:29 PM GMT (Updated: 18 Nov 2019 12:29 PM GMT)
கண்ணூர் அருகே மனைவியை கழுத்தை இறுக்கி கொன்று நாடகமாடிய முதியவர் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலைச்சேரி பானூரை சேர்ந்தவர் குட்டி கிருஷ்ணன் (வயது 68). இவரது மனைவி நிர்மலா (60). நேற்று வீட்டில் இருந்த குட்டி கிருஷ்ணன் வெளியே வந்து தனது மனைவி திடீரென மயங்கி விட்டார் என்று கூறினார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தலைச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நிர்மலா இறந்தார். இது குறித்து டி.எஸ்.பி. வேணுகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு நிர்மலா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவரது கணவரிடம் விசாரணை நடத்த முயன்றனர். அப்போது குட்டி கிருஷ்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலையும் போலீசார் மீட்டு தலைச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, மனைவியை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு நாடகமாடிய குட்டி கிருஷ்ணன் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வருவதாக கூறினர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலைச்சேரி பானூரை சேர்ந்தவர் குட்டி கிருஷ்ணன் (வயது 68). இவரது மனைவி நிர்மலா (60). நேற்று வீட்டில் இருந்த குட்டி கிருஷ்ணன் வெளியே வந்து தனது மனைவி திடீரென மயங்கி விட்டார் என்று கூறினார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தலைச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நிர்மலா இறந்தார். இது குறித்து டி.எஸ்.பி. வேணுகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு நிர்மலா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவரது கணவரிடம் விசாரணை நடத்த முயன்றனர். அப்போது குட்டி கிருஷ்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலையும் போலீசார் மீட்டு தலைச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, மனைவியை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு நாடகமாடிய குட்டி கிருஷ்ணன் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வருவதாக கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X