என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
35 அடி உயர பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து உயிரிழந்த புலி
Byமாலை மலர்7 Nov 2019 11:19 AM GMT (Updated: 7 Nov 2019 11:19 AM GMT)
மகாராஷ்டிரா மாநிலத்தில் 35 அடி உயர பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த புலி பாறைகளிடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திராபூர் நகரிலிருந்து 27 கி.மீ தொலைவில் குனாடா கிராமம் உள்ளது. இங்கு சிர்னா ஆறு உள்ளது. காடுகள் நிறைந்த இப்பகுதியில் வனவிலங்குகள் அதிகம் உள்ளன. அங்குள்ள பாலத்தின் மீது இருந்து புலி ஒன்று சிர்னா ஆற்றில் நேற்று குதித்தது. ஆனால் பாறைகளிடையே புலி சிக்கியதால் ஆற்றிலிருந்து மேலே ஏற இயலவில்லை.
இதையடுத்து அருகிலிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து புலியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் மிதவை கூண்டு இறக்கி புலியை மீட்க முயன்றனர். ஆனால் கூண்டிலும் புலியால் தாவி ஏற முடியவில்லை. புலியை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இருட்டத் தொடங்கியதால் மீட்புபணியை தொடர இயலவில்லை.
இதையடுத்து இன்று காலை மீண்டும் மீட்புப்பணிகள் தொடர்ந்தன. ஆனால் பாலத்தில் இருந்து குதித்ததால் புலி பலத்த காயமடைந்ததாலும், சோர்வடைந்ததாலும் இறுதிவரை அதனால் மேலே ஏற இயலவில்லை. இதனால் புலி உயிரிழந்தது.
இதையடுத்து, புலியின் உடலை பிரேத பரிசோதனைக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். புலி ஏன் பாலத்தில் இருந்து குதித்தது என தெரியவில்லை என அதிகாரிகள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X