search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை

    யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    கொழும்பு:    

    இலங்கை யாழ்ப்பாணம் நகரில் உள்ள பலாலி ராணுவ விமானநிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மாற்றும் பணி கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதற்கு இந்தியாவும் நிதி உதவி வழங்கி இருந்தது. இந்தநிலையில் இந்த விரிவாக்க பணி முடிவடைந்ததை அடுத்து, வருகிற 17-ந்தேதி பலாலி சர்வதேச விமானநிலையமாக அறிவிக்கப்பட உள்ளது.

    இதற்கிடையே அங்கிருந்து முதற்கட்டமாக இந்திய நகரங்களுக்கும், மாலத்தீவுக்கும் 15-ந்தேதியே விமான சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×