என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் பெண்ணுக்கு 35 ஆண்டுகள் கழித்து இந்திய குடியுரிமை
Byமாலை மலர்4 Oct 2019 5:45 AM GMT (Updated: 4 Oct 2019 5:32 AM GMT)
உத்தர பிரதேசத்தில், நீண்ட கால விசாவில் தங்கி இருந்த பாகிஸ்தான் பெண் ஒருவருக்கு 35 ஆண்டுகள் கழித்து இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
முசாபர்நகர்:
உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சையது முகம்மது. இவர் 1984 ஆம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணான சுபேதா என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்த நிலையில் உடனடியாக இந்திய குடியுரிமைக்கு சுபேதா விண்ணப்பித்துள்ளார். ஆனால் அப்போதைய சட்டங்கள் மற்றும் சில அரசியல் காரணங்களால் அவரது விண்ணப்பம் மறுக்கப்பட்டது.
அதன் பிறகு அவர் விசாவை மீண்டும் மீண்டும் புதுப்பித்து நீண்ட கால விசாவில் இந்தியாவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 4 தினங்களுக்கு முன்பு அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இனி அவர் இந்திய குடிமகளுக்கான, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் வேண்டி விண்ணப்பிக்கலாம்.
குடியுரிமை வழங்கப்பட்ட சுபேதாவிற்கு வயது 55. அவருக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்திய குடிமகன்களை மணந்த சுமார் 25 பாகிஸ்தான் பெண்கள் முசாபர்நகர் மாவட்டத்தில் நீண்ட கால விசாவில் வசித்து வருகின்றனர் என அரசு தரப்பு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X