என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகாரில் கனமழையில் சிக்கி 20 பேர் பலி - பள்ளிகளுக்கு விடுமுறை
Byமாலை மலர்29 Sep 2019 8:07 AM GMT (Updated: 29 Sep 2019 8:07 AM GMT)
பீகாரில் பெய்து வரும் கனமழையில் சிக்கி 20 பேர் பலியாகினர். செவ்வாய்க்கிழமை வரை அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் பாட்னாவில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பாட்னாவில் உள்ள நாளந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், பீகாரின் பாகல்பூர் பகுதியில் மழையால் சேதமடைந்த சுவர் இடிந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். இதேபோல், காகல் பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மரம் விழுந்த விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 3 நாட்களில் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி 20 பேர் பலியாகினர் என பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனமழை காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X