என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரசுக்கு தாவிய ஆம் ஆத்மி கட்சி பெண் எம்எல்ஏ பதவி பறிப்பு- சபாநாயகர் நடவடிக்கை
Byமாலை மலர்20 Sep 2019 6:00 AM GMT (Updated: 20 Sep 2019 6:00 AM GMT)
காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஆம் ஆத்மி கட்சி பெண் எம்எல்ஏ அல்கா லம்பாவை சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சி சார்பில் சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்டு அல்கா லம்பா எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அல்கா லம்பா அதிருப்தியில் இருந்தார். இதனால் கட்சி நடவடிக்கையில் இருந்து விலகி இருந்தார்.
கடந்த 6-ந் தேதி அல்கா லம்பா ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதையடுத்து அவர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் ராம்நிவாஸ் கோயலிடம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சவுரவ் பரத்வாஜ் மனு கொடுத்தார்.
அதன்அடிப்படையில் அல்கா லம்பாவை சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நேற்று உத்தரவிட்டார். இந்த தகுதி நீக்கம் செப்டம்பர் 6-ந் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருவதாக கூறி உள்ளார்.
ஏற்கனவே கட்சி தாவல் தடை சட்டத்தின்படி ஆம் ஆத்மியை சேர்ந்த கபில் மிஸ்ரா, சந்தீப்குமார், அனில் பாஜ்பாய், தேவேந்திர ஷெகாவத் ஆகிய 4 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சி சார்பில் சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்டு அல்கா லம்பா எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அல்கா லம்பா அதிருப்தியில் இருந்தார். இதனால் கட்சி நடவடிக்கையில் இருந்து விலகி இருந்தார்.
கடந்த 6-ந் தேதி அல்கா லம்பா ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதையடுத்து அவர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் ராம்நிவாஸ் கோயலிடம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சவுரவ் பரத்வாஜ் மனு கொடுத்தார்.
அதன்அடிப்படையில் அல்கா லம்பாவை சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நேற்று உத்தரவிட்டார். இந்த தகுதி நீக்கம் செப்டம்பர் 6-ந் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருவதாக கூறி உள்ளார்.
ஏற்கனவே கட்சி தாவல் தடை சட்டத்தின்படி ஆம் ஆத்மியை சேர்ந்த கபில் மிஸ்ரா, சந்தீப்குமார், அனில் பாஜ்பாய், தேவேந்திர ஷெகாவத் ஆகிய 4 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X