search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெடும்பாச்சேரி விமான நிலையத்தில் அத்வானியை சந்தித்து பேசிய கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்.
    X
    நெடும்பாச்சேரி விமான நிலையத்தில் அத்வானியை சந்தித்து பேசிய கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்.

    பா.ஜனதா தலைவர் அத்வானியுடன் பினராயி விஜயன் சந்திப்பு

    கேரளாவில் ஓய்வுக்கு வந்த பா.ஜனதா தலைவர் அத்வானியுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து பேசினார்.

    திருவனந்தபுரம்:

    பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் எல்.கே. அத்வானி. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது துணை பிரதமராக பதவி வகித்தார். கேரளாவிற்கு குடும்பத்தினருடன் சுற்றுலா வந்துள்ளார்.

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை 5.40 மணிக்கு நெடும்பாச்சேரி விமான நிலையம் வந்து இறங்கினார்.

    அத்வானி வருவதை அறிந்து கேரள முதல்-மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பினராயி விஜயன், ஆகியோர் விமான நிலையத்திற்கு சென்றார்.

    விமான நிலைய வி.ஐ.பி.க் கள் அறையில் அத்வானியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 5 நிமிடங்கள் நடந்தது.

    அத்வானி-பினராயி விஜயன் சந்திப்பு முடிந்த பின்பு அத்வானி அங்கிருந்து மாராரிகுளம் புறப்பட்டு சென்றார்.

    மாராரிகுளம் மற்றும் கேரளாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் 5 நாட்கள் தங்கி இருந்து ஓய்வு எடுக்கிறார். வருகிற 8-ந்தேதி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்புகிறார். அத்வானி வருகையையொட்டி மாராரி குளம் மற்றும் அவர் தங்கி உள்ள விடுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×