என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அருண்ஜெட்லியால் பா.ஜனதாவில் சேர்ந்தேன் - ஹேமமாலினி
Byமாலை மலர்26 Aug 2019 9:26 AM GMT (Updated: 26 Aug 2019 9:26 AM GMT)
அருண்ஜெட்லி என்னை ஊக்குவித்ததால் பா.ஜனதாவில் சேரும் முடிவை எடுத்தேன் என்று அக்கட்சியின் எம்.பி.யும், பாலிவுட் நடிகையுமான ஹேமமாலினி கூறி உள்ளார்.
ஆக்ரா:
பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அருண்ஜெட்லி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். நேற்று அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
அருண்ஜெட்லி குறித்து பா.ஜனதா எம்.பி.யும், பாலிவுட் நடிகையுமான ஹேமமாலினி கூறியதாவது:-
அருண்ஜெட்லி எப்போதுமே என்னை ஊக்கப்படுத்துவார். பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவதற்கு ஆதரவாக இருந்தார்.
அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு இழப்பாகும். அவர் நிதி மந்திரி பதவியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அவரது மரணம் துரதிருஷ்டவசமானது. அனுபவம் வாய்ந்த ஒருவரை நாடு இழந்து விட்டது.
ஏற்கனவே எனக்கு நெருக்கமான சுஷ்மா சுவராஜ் மரணம் அடைந்தார். தற்போது அருண்ஜெட்லியும் மரணம் அடைந்துள்ளார். இருவரும் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அருண்ஜெட்லி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். நேற்று அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
அருண்ஜெட்லி குறித்து பா.ஜனதா எம்.பி.யும், பாலிவுட் நடிகையுமான ஹேமமாலினி கூறியதாவது:-
நான் அரசியலில் நுழைவதற்கு அருண்ஜெட்லி தான் காரணமாக இருந்தார். அவர் என்னை ஊக்குவித்ததால் பா.ஜனதாவில் சேரும் முடிவை எடுத்தேன். அவரால் தான் அந்த கட்சியில் சேர்ந்தேன்.
அருண்ஜெட்லி எப்போதுமே என்னை ஊக்கப்படுத்துவார். பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவதற்கு ஆதரவாக இருந்தார்.
அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு இழப்பாகும். அவர் நிதி மந்திரி பதவியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அவரது மரணம் துரதிருஷ்டவசமானது. அனுபவம் வாய்ந்த ஒருவரை நாடு இழந்து விட்டது.
ஏற்கனவே எனக்கு நெருக்கமான சுஷ்மா சுவராஜ் மரணம் அடைந்தார். தற்போது அருண்ஜெட்லியும் மரணம் அடைந்துள்ளார். இருவரும் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X