என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அருண் ஜெட்லியின் உடல்நிலை சீராக உள்ளது - வெங்கையா நாயுடு
Byமாலை மலர்10 Aug 2019 3:59 AM GMT (Updated: 10 Aug 2019 3:59 AM GMT)
எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியின் உடல்நிலை சீராக உள்ளதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
புதுடெல்லி:
முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லிக்கு நேற்று திடீரென உடல்சோர்வும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயம் மற்றும் நரம்பியல் மைய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கேட்டறிந்தார்.
தற்போது அருண் ஜெட்லியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லிக்கு நேற்று திடீரென உடல்சோர்வும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயம் மற்றும் நரம்பியல் மைய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று மருத்துவமனைக்கு சென்று அருண்ஜெட்லியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் உள்துறை மந்திரி அமித்ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள் ஹர்ஷ்வர்தன், அஷ்வினி சவுபே ஆகியோரும் ஆஸ்பத்திரிக்கு சென்று நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கேட்டறிந்தார்.
தற்போது அருண் ஜெட்லியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X