search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்கையா நாயுடு
    X
    வெங்கையா நாயுடு

    அருண் ஜெட்லியின் உடல்நிலை சீராக உள்ளது - வெங்கையா நாயுடு

    எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியின் உடல்நிலை சீராக உள்ளதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லிக்கு நேற்று திடீரென உடல்சோர்வும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயம் மற்றும் நரம்பியல் மைய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி நேற்று மருத்துவமனைக்கு சென்று அருண்ஜெட்லியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் உள்துறை மந்திரி அமித்ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள் ஹர்ஷ்வர்தன், அஷ்வினி சவுபே ஆகியோரும் ஆஸ்பத்திரிக்கு சென்று நலம் விசாரித்தனர்.

    அருண் ஜெட்லி

    இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கேட்டறிந்தார்.

    தற்போது அருண் ஜெட்லியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

    Next Story
    ×