search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் ராம்நாத் கோவிந்த்
    X
    நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் ராம்நாத் கோவிந்த்

    கார்கில் தினம் - ஸ்ரீநகர் நினைவிடத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு ஜனாதிபதி மரியாதை செலுத்தினார்

    கார்கில் போரின் 20-ம் ஆண்டு நினைவு தினத்தில், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள நினைவிடத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.
    புதுடெல்லி:

    காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் படையினர், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சுமார் 200 கி.மீ. வரை ஆக்கிரமித்தனர். இந்திய நிலைகளையும் கைப்பற்றியது. இதையடுத்து இந்திய ராணுவம் மிகப்பெரும் தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடித்தது. 
     
    இந்தப் போரின்போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    மலர் வளையம் வைத்து மரியாதை செய்த ஜனாதிபதி

    கார்கில் வெற்றி தினத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கமும் செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கார்கில் போரின் 20-ம் ஆண்டு நினைவு தினத்தில் ஜனாதிபதி ராம்நாத் சிங் இன்று ஜம்மு காஷ்மீர் சென்றார். ஸ்ரீநகரில் உள்ள படாமி பாக் கண்டோன்மெண்ட் நினைவிடத்தில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.
    Next Story
    ×