என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒடிசா - துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் கொல்லப்பட்டான்
Byமாலை மலர்24 July 2019 9:36 AM GMT (Updated: 24 July 2019 9:36 AM GMT)
ஒடிசா மாநிலத்தின் கலஹன்டி மாவட்டத்தில் இன்று சிறப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
புவனேஸ்வர்:
மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.
பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் கலஹன்டி மாவட்டம், கோட்பன்டெல் கிராமத்தை ஒட்டியுள்ள காட்டுப் பகுதியில் சில மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருப்பதாக அம்மாவட்ட சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, நேற்று பின்னிரவு அப்பகுதியை சிறப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.
அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்ட்டுகள் சிறப்பு படையினர் மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் வெடித்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட்டுகளில் ஒருவன் கொல்லப்பட்டான். மற்றவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.
பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.
தொழிலதிபர்களை கடத்திச் சென்று பணம் பறிப்பது, பிணைத்தொகை கிடைக்காவிட்டால் சுட்டுக் கொல்வது, போலீஸ் உளவாளி என்று சந்தேகிக்கும் அப்பாவி மக்களை கொல்வது போன்ற கொடுஞ்செயல்களில் மாவோயிஸ்ட்டுகளும் நக்சலைட்டுகளும் ஈடுபடுகின்றனர்.
இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் கலஹன்டி மாவட்டம், கோட்பன்டெல் கிராமத்தை ஒட்டியுள்ள காட்டுப் பகுதியில் சில மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருப்பதாக அம்மாவட்ட சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, நேற்று பின்னிரவு அப்பகுதியை சிறப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.
அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்ட்டுகள் சிறப்பு படையினர் மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் வெடித்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட்டுகளில் ஒருவன் கொல்லப்பட்டான். மற்றவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X