என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகார், அசாம் வெள்ளத்துக்கு 166 பேர் பலி
Byமாலை மலர்22 July 2019 8:43 AM GMT (Updated: 22 July 2019 8:43 AM GMT)
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த வாரம் ஏற்பட்ட மழை வெள்ளத்துக்கு பீகாரில் 102 பேரும், அசாமில் 64 பேரும் பலியாகி உள்ளனர்.
பாட்னா:
பீகார் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கடந்த வாரம் ஏற்பட்ட மழை வெள்ளத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து உள்ளன. வெள்ளத்துக்கு இதுவரை 166 பேர் பலியாகி உள்ளனர். பீகார் மாநிலத்தில் 102 பேரும், அசாமில் 64 பேரும் இறந்து உள்ளனர்.
இந்த இரு மாநிலத்திலும் 1 கோடியே 11 லட்சம் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். பீகாரில் 12 மாவட்டங்களில் 72.78 லட்சம் பேரும், அசாமில் 18 மாவட்டங்களில் 38.37 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பீகாரில் சிதாமர்கி மாவட்டம் தான் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அங்கு 27 பேர் வெள்ளத்தில் சிக்கி இறந்து உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மதுபானி மாவட்டத்தில் 23 பேர் பலியாகி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சிதாமர்கி மற்றும் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களுக்கு முதல்-மந்திரி நிதிஷ்குமார் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணங்களை வழங்கினார்.
அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் மட்டும் வெள்ளத்துக்கு 141 விலங்குகள் உயிர் இழந்துள்ளன.
பீகார் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கடந்த வாரம் ஏற்பட்ட மழை வெள்ளத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து உள்ளன. வெள்ளத்துக்கு இதுவரை 166 பேர் பலியாகி உள்ளனர். பீகார் மாநிலத்தில் 102 பேரும், அசாமில் 64 பேரும் இறந்து உள்ளனர்.
இந்த இரு மாநிலத்திலும் 1 கோடியே 11 லட்சம் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். பீகாரில் 12 மாவட்டங்களில் 72.78 லட்சம் பேரும், அசாமில் 18 மாவட்டங்களில் 38.37 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பீகாரில் சிதாமர்கி மாவட்டம் தான் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அங்கு 27 பேர் வெள்ளத்தில் சிக்கி இறந்து உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மதுபானி மாவட்டத்தில் 23 பேர் பலியாகி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சிதாமர்கி மற்றும் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களுக்கு முதல்-மந்திரி நிதிஷ்குமார் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணங்களை வழங்கினார்.
அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் மட்டும் வெள்ளத்துக்கு 141 விலங்குகள் உயிர் இழந்துள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X