search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரைபுரண்டோடும் வெள்ளம்
    X
    கரைபுரண்டோடும் வெள்ளம்

    பீகார் - வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 92 ஆக உயர்வு

    பீகாரில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்யும் மழையால் மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகின. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளநீர் அபாயகட்டத்தை தாண்டி ஓடுகிறது.

    நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அங்கு வசித்த பல ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில அரசின் மீட்புக்குழுவினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில், பீகார் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது என மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×