என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாஜகவுக்கு எதிராக பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் - மத்திய முன்னாள் மந்திரி குலாம் நபி ஆசாத் கைது
Byமாலை மலர்10 July 2019 9:52 AM GMT (Updated: 10 July 2019 9:52 AM GMT)
கர்நாடக மாநில அரசியல் குழப்பங்களுக்கு காரணமாக பாஜகவை குற்றம்சாட்டி பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்திய குலாம் நபி ஆசாத், சித்தராமையா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:
கர்நாடக முதல் மந்திரி பதவியில் இருந்து குமாரசாமி உடனடியாக விலக வேண்டும் என அம்மாநில சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே எடியூரப்பா தலைமையில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு போட்டியாக, கர்நாடக மாநில அரசியல் குழப்பங்களுக்கு காரணமாக பாஜகவை குற்றம்சாட்டி பெங்களூரு நகரில் கவர்னர் மாளிகை அருகே மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரசாரும், இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய முன்னாள் மந்திரி குலாம் நபி ஆசாத், , கர்நாடக துணை முதல் மந்திரி பரமேஸ்வரா, முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் வேணுகோபால், மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில், குலாம் நபி ஆசாத், சித்தராமையா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தி, அழைத்துச் சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X