என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களை தனியார் மயமாக்கும் திட்டமில்லை - மந்திரி திட்டவட்டம்
Byமாலை மலர்28 Jun 2019 1:44 PM GMT (Updated: 28 Jun 2019 1:44 PM GMT)
ராஜ்தானி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளை தனியார் மயமாக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை என ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாக அமைந்த மத்திய அரசில் ரெயில்வே துறைக்கென தனியாக 100 நாள் செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டத்தின்கீழ் ராஜ்தானி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவைகளை நிர்வகிக்கும் பொறுப்புகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
இதற்கான டெண்டர் இன்னும் 100 நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு ரெயில்வே பணியாளர்கள் தொழிற்சங்கம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது. தனியார் வசம் ஓப்படைக்கப்பட்ட பின்னர் சேவைகள் தொடர்பான குறைபாடு மற்றும் கட்டண உயர்வை எப்படி கட்டுப்படுத்த முடியும்? என்ற கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுரேந்திரநாத் நாகர் என்பவரின் கேள்விக்கு எழுத்து மூலமாக இன்று பதிலளித்த ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், ‘ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களையோ இந்த துறைசார்ந்த வேறெந்த அமைப்பையோ தனியார் மயமாக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை’ என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X