search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
    X

    தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தின் சில இடங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் ‘கத்திரி’ வெயில் காலம் முடிந்த பின்னரும் பல மாவட்டங்களில் வெயில் அளவு குறையவில்லை. தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை ஒருபுறமும், வெப்பத்தின் தாக்கம் மறுபுறமும் மக்களை வாட்டி வதைத்தது. வெப்பச் சலனம் காரணமாகவும், தென்மேற்கு பருவமழை தாக்கத்தாலும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வந்தாலும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவியது. நேற்று பிற்பகல் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது.

    இந்த நிலையில், தமிழகத்தின் சில இடங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



    மேலும், வடகிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வடக்கு, தெற்கு வங்க கடல், லட்சத்தீவு கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
    Next Story
    ×