search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் விஷவாயு தாக்கி 7 பேர் பலி - கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தியபோது சோகம்
    X

    குஜராத்தில் விஷவாயு தாக்கி 7 பேர் பலி - கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தியபோது சோகம்

    குஜராத் மாநிலத்தின் வதோதராவில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தியபோது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உள்பட 7 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் உள்ள பர்திகுயி பகுதியில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இன்று காலை அந்த ஓட்டலின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு தொழிலாளிகள் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×