என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கழிவுநீர் தொட்டி"
- மோசஸ், தேவன் ஆகியோர் விஷ வாயு தாக்கி பலியானார்கள்.
- கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.
திருநின்றவூர்:
ஆவடி, ஓ.சி.எப். பகுதியில் உள்ள குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது தொழிலாளர்கள் மோசஸ், தேவன் ஆகியோர் விஷ வாயு தாக்கி பலியானார்கள். இது தொடர்பாக தேசிய தூய்மைபணியாளர்கள் பாதுகாப்பு ஆணைய தலைவர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.
மேலும் அவர்கள், ஆவடி மாநகராட்சி அதிகாரிகளிடம் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.
- சுப்பிரமணியத்தின் உடலை போலீசார் மீட்டனர்.
- பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (65).இவர் கிருஷ்ணாபுரம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்பு வேலை செய்து வந்தார். நேற்று காலை வேலைக்கு சென்ற சுப்பிரமணி பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் அங்குள்ள கழிவு நீர் தொட்டிக்குள் சுப்பிரமணி பிணமாக கிடந்தார்.
அவரது உடலை போலீசார் மீட்டனர். சுப்பிரமணி கழிவு நீர் தொட்டிக்குள் தவறி விழுந்தாரா? அல்லது விஷவாயு தாக்கியதா? என்பது குறித்து பொன்னேரி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
- அழகர்சாமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜாமணி என்பவருக்கும் வீட்டின் முன்பாக உள்ள செப்டிக் டேங்க் தொட்டி வைப்பதில் பிரச்சினை இருந்தது.
- செப்டிக் டேங்க் குழி தோண்டினால் நான் எப்படி செல்வேன் என்று அழகர்சாமி ராஜா மணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 38). இவர் நரிக்குடி அருகே உள்ள துய்யனூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி கீதா பிரியா.
அழகர்சாமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜாமணி என்பவருக்கும் வீட்டின் முன்பாக உள்ள செப்டிக் டேங்க் தொட்டி வைப்பதில் பிரச்சினை இருந்தது. இதுதொடர்பாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
செப்டிக் டேங்க் குழி தோண்டினால் நான் எப்படி செல்வேன் என்று அழகர்சாமி ராஜா மணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று இவர்களுக்குள் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
இதில் மனம் உடைந்த ஆசிரியர் அழகர்சாமி வீட்டில் வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளித்துள்ளார் 80 சதவீத தீக்காயத்துடன் இருந்தவரை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் கடந்த 10-ந் தேதி சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அழகர்சாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றன.
- அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவு நீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது
- கழிவுநீர் தொட்டியின் மேல் பகுதி திறந்து கிடந்ததால் அதில் கலா தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
போரூர்:
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், தனலட்சுமி நகரை சேர்ந்தவர் மகா தேவன். இவரது மனைவி கலா(வயது50).
இவர் அதே பகுதி மெட்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை பார்த்து வந்தார். கடந்த 20-ந் தேதி வழக்கம் போல வீட்டு வேலை பார்க்க சென்ற கலா பின்னர் திரும்பி வர வில்லை. அவர் மாயமாகி இருந்தார். அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். இதுபற்றி மகாதேவன் மதுரவாயல் போலீசிலும் புகார் செய்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அதே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவு நீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. அங்கு வசிப்பவர்கள் சென்று பார்த்தபோது கலா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கழிவுநீர் தொட்டியின் மேல் பகுதி திறந்து கிடந்ததால் அதில் கலா தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் மாயமான 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டு உள்ளார்.
- மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கழிவு நீர் தொட்டியில் பெண் சிசு பிணம் மிதந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டு அருகில் உள்ள ஒரு கழிவு நீர் தொட்டியில் ஒரு குழந்தை பிணமாக மிதந்த நிலையில் கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இது தொடர்பாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்துக்கு விைரந்து சென்று கழிவுநீர் தொட்டியில் கிடந்த அந்த குழந்தை உடலை மீட்டனர். அது பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஆகும்.
அந்த குழந்தையை கழிவுநீர் தொட்டியில் வீசி சென்றது யார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரி சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்காக வந்திருந்த யாரோ பெண் தான், பெண் சிசு சடலத்தை கழிவு நீர் தொட்டியில் வீசிச்சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.
கள்ளக்காதலில் பிறந்ததால் வேண்டாம் என்று குழந்தையை பெற்றெடுத்த பெண் வீசி சென்றாரா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீசினார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஐகோர்ட்டில் மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் நாராயணன், தாக்கல் செய்த மனுவில், ‘மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை தற்போதும் நீடித்து வருகிறது. கழிவுநீர் தொட்டி, பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 100-க்கும் மேற்பட்டோர் இந்த பணியின் போது பலியாகி உள்ளனர். இவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கவும், மறுவாழ்வு கிடைக்கவும் உத்தவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கழிவுநீர் தொட்டி, பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும்போது உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அதே வேலையில் ஈடுபடுவதை தடுக்க அரசு மாற்று வேலை வழங்க வேண்டும் என்றும் கடந்த 2010-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது. இதுபோன்ற ஆபத்தான தொழிலைச் செய்பவர்களைத் தடுக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டு தொகையை 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து 8 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்