கழிவு நீர் தொட்டிக்குள் தொழிலாளி சடலம்- விஷவாயு தாக்கியதா?

சுப்பிரமணியத்தின் உடலை போலீசார் மீட்டனர்.பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழிவு நீர் தொட்டிக்குள் தொழிலாளி சடலம்- விஷவாயு தாக்கியதா?
Published on

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (65).இவர் கிருஷ்ணாபுரம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்பு வேலை செய்து வந்தார். நேற்று காலை வேலைக்கு சென்ற சுப்பிரமணி பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் அங்குள்ள கழிவு நீர் தொட்டிக்குள் சுப்பிரமணி பிணமாக கிடந்தார்.

அவரது உடலை போலீசார் மீட்டனர். சுப்பிரமணி கழிவு நீர் தொட்டிக்குள் தவறி விழுந்தாரா? அல்லது விஷவாயு தாக்கியதா? என்பது குறித்து பொன்னேரி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com