search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் சோகம் -விஷவாயு தாக்கி 2 பேர் பலி
    X

    டெல்லியில் சோகம் -விஷவாயு தாக்கி 2 பேர் பலி

    தலைநகர் டெல்லியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளிகள் பரிதாபமாக பலியாகினர்.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் ரோகிணி பகுதியில் உள்ள பிரேம் நகரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அதில் இறங்கினர். அப்போது, திடீரென விஷவாயு தாக்கியது. இதில் 5 பேரும் மயக்கம் அடைந்தனர்.

    அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் கழிவுநீர் தொட்டியில் விழுந்து கிடந்த தொழிலாளர்களை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். அவர்களில் 2 பேர் விஷவாயு தாக்கி பலியானதாகவும் மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மீட்பு படையினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×