search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடிசாவில் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய பெண் உள்பட 5 துப்புறவு தொழிலாளிகள் பலி
    X

    ஒடிசாவில் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய பெண் உள்பட 5 துப்புறவு தொழிலாளிகள் பலி

    ஒடிசா மாநிலத்தின் ராயகடா மாவட்டத்தில் இன்று சுத்தம் செய்வதற்காக கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய ஒரு பெண் உள்பட 5 துப்புரவு தொழிலாளிகள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் ராயகடா மாவட்டத்துக்கு உட்பட்ட டுர்கி  கிராமத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கழிவுநீர் தொட்டிக்குள் ஒரு பெண் தொழிலாளி இன்று இறங்கினார். தொட்டியில்  இருந்து வெளியான நச்சுவாயுவினால் மூச்சுத்திணறிய அந்த பெண்ணின் கூச்சலை கேட்டு அடுத்தடுத்து 5 தொழிலாளிகள் அவரை மீட்பதற்காக உள்ளே இறங்கினர்.

    அவர்கள் 5 பேரும் மயக்கமடைந்து விழுந்தனர். இதைகண்ட அக்கம்பக்கத்தினர் தொட்டியின் மேல்பகுதியில் இருந்த சிமெண்ட் காரையை உடைத்து அவர்கள் 6 பேரையும் வெளியே மீட்டனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களில் ஒரு பெண் உள்பட 5 பேர் வழியிலேயே உயிரிழந்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பிரேதங்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    Next Story
    ×