search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை- பாதுகாப்புப் படை அதிரடி
    X

    சட்டீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை- பாதுகாப்புப் படை அதிரடி

    சட்டீஸ்கரின் கான்கெர் வனப்பகுதியில், நேற்றிரவு 2 நக்சல்கள் பாதுகாப்புப் படையினாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ராய்பூர்: 

    சட்டீஸ்கரின் கான்கெர் வனப்பகுதியில், நேற்றிரவு நக்சல்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து நக்சல்கள் இருக்கும் பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். இதனை அறிந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சிறிது நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில் 2 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்த பயங்கரமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  
    Next Story
    ×