என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோனியா போட்டியிடும் தொகுதியில் அத்துமீறல் - பா.ஜனதா வேட்பாளர் மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார்
Byமாலை மலர்5 May 2019 10:20 PM GMT (Updated: 5 May 2019 10:20 PM GMT)
சோனியா போட்டியிடும் தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளர் அரசு வாகனங்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தி வருவதாக தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. #Congress #BJP #ElectionCommission
ரேபரேலி:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில் இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. சோனியாவை எதிர்த்து அவரது தீவிர ஆதரவாளராக இருந்து பாரதீய ஜனதா கட்சிக்கு தாவிய தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார்.
இந்தநிலையில் நேற்று காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் வி.சி.சுக்லா தேர்தல் கமிஷனில் எழுத்து மூலமாக பா.ஜனதா வேட்பாளர் மீது புகார் அளித்து உள்ளார்.
அதில் அவர், ‘பாரதீய ஜனதா வேட்பாளர் அரசு வாகனங்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறார். உசார் என்ற இடத்தில் நேற்று அதை போலீசார் கைப்பற்றியும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அவர் கட்சி மாறிய நிலையில் எம்.எல்.சி. அதிகாரத்தை தேர்தலில் பயன்படுத்தி வருகிறார். எனவே முறையான சுதந்திரமான தேர்தல் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதில் குறிப்பிட்டுள்ளார். #Congress #BJP #ElectionCommission
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில் இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. சோனியாவை எதிர்த்து அவரது தீவிர ஆதரவாளராக இருந்து பாரதீய ஜனதா கட்சிக்கு தாவிய தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார்.
இந்தநிலையில் நேற்று காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் வி.சி.சுக்லா தேர்தல் கமிஷனில் எழுத்து மூலமாக பா.ஜனதா வேட்பாளர் மீது புகார் அளித்து உள்ளார்.
அதில் அவர், ‘பாரதீய ஜனதா வேட்பாளர் அரசு வாகனங்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறார். உசார் என்ற இடத்தில் நேற்று அதை போலீசார் கைப்பற்றியும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அவர் கட்சி மாறிய நிலையில் எம்.எல்.சி. அதிகாரத்தை தேர்தலில் பயன்படுத்தி வருகிறார். எனவே முறையான சுதந்திரமான தேர்தல் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதில் குறிப்பிட்டுள்ளார். #Congress #BJP #ElectionCommission
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X