என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாஜக ஆட்சியில் பாகிஸ்தான், சீனாவால் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது - யோகி ஆதித்யநாத்
Byமாலை மலர்15 April 2019 9:28 AM GMT (Updated: 15 April 2019 9:28 AM GMT)
ஒடிசா மாநிலத்தில் ரூர்கேலா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக ஆட்சியில் பாகிஸ்தான், சீனாவால் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது என கூறியுள்ளார். #YogiAdityanath #LoksabhaElections2019
ரூர்கெலா:
ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 3 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள ரூர்கேலா பகுதியில் இன்று நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
ஆனால் பாஜக ஆட்சியில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது. பாகிஸ்தான், புல்வாமாவில் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் இறந்தனர். இதற்கான பதிலடியும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் கொடுக்கப்பட்டது. இதன் நோக்கம் பயங்கரவாதிகளின் முகாம்களை அழிப்பது மட்டுமல்ல, பாகிஸ்தானின் முதுகெலும்பை உடைக்க செய்யப்பட்ட உறுதியான செயலாகும்.
மோடி அலை நாடெங்கும் வீசுகிறது. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக தலைமையிலான அரசை மீண்டும் கொண்டு வர ஒடிசா மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #YogiAdityanath #LoksabhaElections2019
ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 3 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள ரூர்கேலா பகுதியில் இன்று நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சி நக்சல்கள் மற்றும் பயங்கரவாதிகளிடம் மென்மையான அணுகுமுறையையே கையாண்டு வருகிறது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது சீன ராணுவத்தினர் தொடர்ந்து ஊடுருவி வந்தனர். பிரதமராக மோடி வந்த பின்னர் இது முடிவுக்கு வந்தது. இதேப்போல் பாகிஸ்தான் ராணுவத்தினர், நம் இந்திய ராணுவ வீரர்களின் தலைகளை வெட்டினர்.
ஆனால் பாஜக ஆட்சியில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது. பாகிஸ்தான், புல்வாமாவில் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் இறந்தனர். இதற்கான பதிலடியும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் கொடுக்கப்பட்டது. இதன் நோக்கம் பயங்கரவாதிகளின் முகாம்களை அழிப்பது மட்டுமல்ல, பாகிஸ்தானின் முதுகெலும்பை உடைக்க செய்யப்பட்ட உறுதியான செயலாகும்.
மோடி அலை நாடெங்கும் வீசுகிறது. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக தலைமையிலான அரசை மீண்டும் கொண்டு வர ஒடிசா மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #YogiAdityanath #LoksabhaElections2019
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X