என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » yogiadithyanath
நீங்கள் தேடியது "YogiAdithyanath"
ஒடிசா மாநிலத்தில் ரூர்கேலா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக ஆட்சியில் பாகிஸ்தான், சீனாவால் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது என கூறியுள்ளார். #YogiAdityanath #LoksabhaElections2019
ரூர்கெலா:
ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 3 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள ரூர்கேலா பகுதியில் இன்று நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
ஆனால் பாஜக ஆட்சியில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது. பாகிஸ்தான், புல்வாமாவில் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் இறந்தனர். இதற்கான பதிலடியும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் கொடுக்கப்பட்டது. இதன் நோக்கம் பயங்கரவாதிகளின் முகாம்களை அழிப்பது மட்டுமல்ல, பாகிஸ்தானின் முதுகெலும்பை உடைக்க செய்யப்பட்ட உறுதியான செயலாகும்.
மோடி அலை நாடெங்கும் வீசுகிறது. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக தலைமையிலான அரசை மீண்டும் கொண்டு வர ஒடிசா மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #YogiAdityanath #LoksabhaElections2019
ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 3 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள ரூர்கேலா பகுதியில் இன்று நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சி நக்சல்கள் மற்றும் பயங்கரவாதிகளிடம் மென்மையான அணுகுமுறையையே கையாண்டு வருகிறது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது சீன ராணுவத்தினர் தொடர்ந்து ஊடுருவி வந்தனர். பிரதமராக மோடி வந்த பின்னர் இது முடிவுக்கு வந்தது. இதேப்போல் பாகிஸ்தான் ராணுவத்தினர், நம் இந்திய ராணுவ வீரர்களின் தலைகளை வெட்டினர்.
ஆனால் பாஜக ஆட்சியில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது. பாகிஸ்தான், புல்வாமாவில் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் இறந்தனர். இதற்கான பதிலடியும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் கொடுக்கப்பட்டது. இதன் நோக்கம் பயங்கரவாதிகளின் முகாம்களை அழிப்பது மட்டுமல்ல, பாகிஸ்தானின் முதுகெலும்பை உடைக்க செய்யப்பட்ட உறுதியான செயலாகும்.
மோடி அலை நாடெங்கும் வீசுகிறது. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக தலைமையிலான அரசை மீண்டும் கொண்டு வர ஒடிசா மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #YogiAdityanath #LoksabhaElections2019
உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சிப்பொறுப்பு ஏற்றதிலிருந்து எந்தவித கலவரங்களும் இல்லை என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். #BJP #YogiAdithyanath
லக்னோ:
பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி 7 கட்டங்களாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி, பாஜகவின் ஆட்சி குறித்து யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
பாஜகவின் 2 ஆண்டுகால ஆட்சியில் எவ்வித கலவரங்களும் ஏற்படவில்லை. இந்த ஆட்சியில் குற்றங்களும் குற்றவாளிகளும் குறைக்கப்பட்டுள்ளன. உத்தரபிரதேசம் பாஜக ஆட்சியில் பாதுகாப்பாக உள்ளது. மேலும் 63 ஆண்டுகளுக்கு பின்னர் உத்தரபிரதேச உதய தினம் கடந்த 2018ம் ஆண்டு பாஜக ஆட்சியில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #BJP #YogiAdithyanath
பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி 7 கட்டங்களாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி, பாஜகவின் ஆட்சி குறித்து யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
பாஜகவின் 2 ஆண்டுகால ஆட்சியில் எவ்வித கலவரங்களும் ஏற்படவில்லை. இந்த ஆட்சியில் குற்றங்களும் குற்றவாளிகளும் குறைக்கப்பட்டுள்ளன. உத்தரபிரதேசம் பாஜக ஆட்சியில் பாதுகாப்பாக உள்ளது. மேலும் 63 ஆண்டுகளுக்கு பின்னர் உத்தரபிரதேச உதய தினம் கடந்த 2018ம் ஆண்டு பாஜக ஆட்சியில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #BJP #YogiAdithyanath
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X