search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய, சிறுதொழில் நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களில் ரூ.1 கோடி வங்கிக் கடன் - பிரதமர் மோடி
    X

    மத்திய, சிறுதொழில் நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களில் ரூ.1 கோடி வங்கிக் கடன் - பிரதமர் மோடி

    மத்தியரகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய்வரை வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். #Rs1crore #Rs1crorein59mins #Modi
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று நடைபெற்ற மத்தியரகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் தொடர்பான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்று உரையாற்றினார்.

    தீபாவளி பரிசாக மத்திய மற்றும் சிறுதொழில்களின் வளர்ச்சிக்காக 12 புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவில் புதிய சகாப்தம் உருவாகி நான்காவது தொழில் புரட்சிக்கு நமது நாடு தலைமை தாங்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட சுலபமாக தொழில் தொடங்க தகுதியான நாடுகள் பட்டியலில் இந்தியா இந்த ஆண்டு 23 இடங்கள் முன்னேறியுள்ளதை பெருமிதத்துடன் குறிப்பிட்ட மோடி, மத்தியரகம் மற்றும் சிறுதொழில் துறையின் வளர்ச்சியினால் இந்தியா இந்த முன்னேற்றத்தை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும், மத்தியரகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் சுலபமாக வங்கி கடன்களை பெறும் வகையில் நாடு தழுவிய அளவில் 59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய்வரை சுலபமாக கடன்பெறும் இணைய வசதி இன்று முதல் தொடங்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார். #Rs1crore #Rs1crorein59mins #Modi
    Next Story
    ×