என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கேரளாவை கலவர பூமியாக்க ஆர்எஸ்எஸ் அமைப்புகள் முயற்சி- முதல்-மந்திரி பினராய் விஜயன் கேரளாவை கலவர பூமியாக்க ஆர்எஸ்எஸ் அமைப்புகள் முயற்சி- முதல்-மந்திரி பினராய் விஜயன்](https://img.maalaimalar.com/Articles/2018/Oct/201810231906597106_kerala-CM-Pinarayi-Vijayan-hits-out-at-BJP-RSS-for-violent_SECVPF.gif)
X
கேரளாவை கலவர பூமியாக்க ஆர்எஸ்எஸ் அமைப்புகள் முயற்சி- முதல்-மந்திரி பினராய் விஜயன்
By
மாலை மலர்23 Oct 2018 1:36 PM GMT (Updated: 23 Oct 2018 1:36 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சபரிமலையை போராட்டக்களமாக்கவும், கேரளாவை கலவர பூமியாக மாற்றவும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் முயற்சி செய்வதாக கேரள முதல்- மந்திரி பினராய் விஜயன் கூறியுள்ளார். #Sabarimala #PinarayiVijayan #RSS
திருவனந்தபுரம்:
சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள முதல்- மந்திரி பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரளாவில் அய்யப்பன் கோவில் அமைந்துள்ள சபரிமலை ஒரு புனித பூமி. இங்கு அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதனை கேரள அரசு செயல்படுத்தியது.
சபரிமலைக்கு சென்ற பக்தர்களை கேரள அரசு தடுக்கவில்லை. போலீசாரும் இது போன்ற செயல்களில் ஈடுபடவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்தும் முயற்சியை மட்டுமே கேரள அரசு செய்தது.
ஆனால் சபரிமலையில் திரண்ட போராட்டக்காரர்கள் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்த விடாமல் தடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் இருந்து கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்களை பாதுகாக்க போலீசார் பெரும் சிரமப்பட்டனர்.
அப்போது நடந்த கல்வீச்சில் பல போலீசார் காயம் அடைந்தனர். சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்களும், பெண் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்.
சபரிமலையை போராட்டக்களமாக்கவும், கேரளாவை கலவர பூமியாக மாற்றவும் முயற்சி நடக்கிறது. இதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.
![](https://img.maalaimalar.com/InlineImage/201810231906597106_1_rmwr6znc._L_styvpf.jpg)
பத்திரிகையாளர்கள் மீது இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது கேரளாவில் இதுதான் முதல்முறையாகும்.
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், போராட்டக்காரர்களிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சபரிமலையில் தடியடி நடத்தப்பட்டது.
உண்மையான பக்தர்களின் பாதுகாப்புக்காகவே போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #PinarayiVijayan #RSS
சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள முதல்- மந்திரி பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரளாவில் அய்யப்பன் கோவில் அமைந்துள்ள சபரிமலை ஒரு புனித பூமி. இங்கு அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதனை கேரள அரசு செயல்படுத்தியது.
சபரிமலைக்கு சென்ற பக்தர்களை கேரள அரசு தடுக்கவில்லை. போலீசாரும் இது போன்ற செயல்களில் ஈடுபடவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்தும் முயற்சியை மட்டுமே கேரள அரசு செய்தது.
ஆனால் சபரிமலையில் திரண்ட போராட்டக்காரர்கள் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்த விடாமல் தடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் இருந்து கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்களை பாதுகாக்க போலீசார் பெரும் சிரமப்பட்டனர்.
அப்போது நடந்த கல்வீச்சில் பல போலீசார் காயம் அடைந்தனர். சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்களும், பெண் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்.
சபரிமலையை போராட்டக்களமாக்கவும், கேரளாவை கலவர பூமியாக மாற்றவும் முயற்சி நடக்கிறது. இதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.
குறிப்பாக சபரிமலைக்கு சென்ற வாகனங்கள் தடுக்கப்பட்டன. பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். பெண் பக்தர்களும் கல்வீச்சில் காயம் அடைந்துள்ளனர். அவர்களின் வீடுகளும் தாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
![](https://img.maalaimalar.com/InlineImage/201810231906597106_1_rmwr6znc._L_styvpf.jpg)
பத்திரிகையாளர்கள் மீது இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது கேரளாவில் இதுதான் முதல்முறையாகும்.
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், போராட்டக்காரர்களிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சபரிமலையில் தடியடி நடத்தப்பட்டது.
உண்மையான பக்தர்களின் பாதுகாப்புக்காகவே போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #PinarayiVijayan #RSS
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)