search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் எரிவாயு முனையம், பைப்லைன் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
    X

    குஜராத்தில் எரிவாயு முனையம், பைப்லைன் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

    குஜராத் மாநிலத்தின் கச் மாவட்டத்தில் முன்ட்ரா எரிவாயு முனையம், அன்ஜர்-முன்ட்ரா எரிவாயு பைப்லைன் உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். #Modiinaugurates #MundraLngTerminal
    அகமதாபாத்:

    பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது பிறந்த இடமான குஜராத் மாநிலத்துக்கு வந்துள்ளார். இங்குள்ள ஆனந்த் மாவட்டத்தில் உள்ள அமுல் பால் பண்ணை நிறுவனத்துக்கு சொந்தமான வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன சாக்லேட் தொழிற்சாலையை இன்று காலை அவர் திறந்து வைத்தார்.

    மேலும் ஆனந்த் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உணவு பதடுத்தும் பயிற்சி நிலையத்தை தொடங்கி வைக்கும் அவர், முஜ்குவா கிராமத்தில் சூரிய மின்சக்தி கூட்டுறவு நிறுவனத்தையும் திறந்து வைத்தார்.

    அமுல் பால் பண்ணையின் விரிவாக்கமாக ஆனந்த், கட்ராஜ் பகுதிகளில் இரண்டு கிளைகளுக்கான அடிக்கல்லை நாட்டிய மோடி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
    முன்ட்ரா இயற்கை எரிவாயு முனையம், அன்ஜார்-  முன்ட்ரா எரிவாயு குழாய் திட்டம், பலன்பூர்-பாலி-பார்மர் எரிவாயு குழாய் திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

    இன்று மாலையில் ராஜ்கோட் மாவட்டத்துக்கு செல்லும் பிரதமர்,  ஆல்பிரட்  உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.

    குஜராத் மாநில அரசின் பொது வீட்டு வசதி திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள 240 வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். #Modiinaugurates #MundraLngTerminal
    Next Story
    ×