search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியின் தலையை துண்டித்து போலீஸ் நிலையத்தில் வாலிபர் சரண்
    X

    கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியின் தலையை துண்டித்து போலீஸ் நிலையத்தில் வாலிபர் சரண்

    கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியின் தலையை துண்டித்து போலீஸ் நிலையத்தில் வாலிபர் சரண் அடைந்தார். #murdercase
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு அருகே தரகரே தாலுகாவில் உள்ள சிவானி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது35). இவரின் மனைவி ரூபா (28) இருவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரு குழந்தைகள் உள்ளனர்.

    ரூபாவுக்கும், அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த சதீஷ் ரூபாவை பலமுறை கண்டித்து உள்ளார்.

    சதீஷ் நேற்று காலை பெங்களூரு சென்று விட்டு மாலை வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டில் மனைவி ரூபா வேறு ஒரு நபருடன் இருப்பதை சதீஷ் பார்த்து விட்டார். இதனால ஆத்திரம் அடைந்த சதீஷ் இருவரையும் அடித்து, உதைத்து கூர்மையான ஆயுதத்தால் தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அந்த நபர் தப்பி ஓடி விட்டார். ஆனால் ஆத்திரம் தீராத சதீஷ் மனைவி ரூபாவை கொலை செய்து, அவரின் தலையை துண்டாக வெட்டி எடுத்தார்.

    பின்னர் ஒரு சாக்கில் ரத்தம் சொட்ட, சொட்ட மனைவி ரூபாவின் தலையை இருசக்கர வாகனத்தில் வைத்து 20 கி.மீ. தொலைவில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சதீஷ் சென்றார். போலீஸ் நிலையம் சென்ற சதீஷ் சாக்கில் இருந்த தனது மனைவியின் தலையின் முடியை பிடித்து தூக்கி தலையுடன் சரண் அடைவதாக தெரிவித்தார். இந்த காட்சியை கண்ட அங்கிருந்த போலீசார் சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்து பதற்றம் அடைந்தனர்.

    பின்னர் அங்கிருந்த போலீசார் சதீசை கைது செய்து, வெட்டப்பட்ட ரூபாவின் தலையுடன் கொலை நடந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் ரூபாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    சிக்மங்களூரு மாவட்ட நீதிமன்றத்தில் சதீசை போலீசார் ஆஜர்படுத்திய நிலையில் அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. 
    Next Story
    ×