என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரானில் தவித்து வரும் 21 தமிழக மீனவர்கள் மீட்பு, 3-ம் தேதி தாயகம் திரும்ப நடவடிக்கை - சுஷ்மா சுவராஜ்
Byமாலை மலர்31 July 2018 9:48 PM GMT (Updated: 31 July 2018 9:48 PM GMT)
ஈரான் நாட்டில் ஊதியம் வழங்காமல் ஏமாற்றப்பட்டதால் ஆதரவின்றி தவித்து வந்த தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர், அவர்கள் 3-ம் தேதி தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். #SushmaSwaraj
புதுடெல்லி :
கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 21 மீனவர்கள் ஈரான் நாட்டு முதலாளி ஒருவருக்கு சொந்தமான 3 விசைப்படகுகளில் கடந்த 6 மாதங்களாக ஈரானில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், அவர்களுக்கு 6 மாதமாக மீன்பிடித்ததற்கான உரிய கூலியை முறையாக வழங்காமலும், போதுமான உணவு வழங்காமலும் ஈரான் நாட்டு முதலாளியால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இதனால், தங்க இடமின்றி, உணவு இன்றி அவர்கள் அங்கு கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த தகவலை மீனவர்கள் தமிழகத்தில் உள்ள அவர்களின் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய தூதரகம் தலையிட்டு தங்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசுக்கு கோரிக்கையும் வைத்தனர்.
அதன்படி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியை கடந்த ஜூன் மாதம் வலியுறுத்தினார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் வெளியுறுவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்த்தித்து 21 மீனவர்கள் மீட்பு குறித்து பேசினார்.
இந்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-
ஈரானில் தனித்து விடப்பட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 21 இந்திய மீனவர்கள் இந்திய தூத்தரகத்தின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் ஆகஸ்ட் 3-ம் தேதி தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். #SushmaSwaraj
கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 21 மீனவர்கள் ஈரான் நாட்டு முதலாளி ஒருவருக்கு சொந்தமான 3 விசைப்படகுகளில் கடந்த 6 மாதங்களாக ஈரானில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், அவர்களுக்கு 6 மாதமாக மீன்பிடித்ததற்கான உரிய கூலியை முறையாக வழங்காமலும், போதுமான உணவு வழங்காமலும் ஈரான் நாட்டு முதலாளியால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இதனால், தங்க இடமின்றி, உணவு இன்றி அவர்கள் அங்கு கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த தகவலை மீனவர்கள் தமிழகத்தில் உள்ள அவர்களின் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய தூதரகம் தலையிட்டு தங்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசுக்கு கோரிக்கையும் வைத்தனர்.
அதன்படி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியை கடந்த ஜூன் மாதம் வலியுறுத்தினார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் வெளியுறுவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்த்தித்து 21 மீனவர்கள் மீட்பு குறித்து பேசினார்.
இந்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-
ஈரானில் தனித்து விடப்பட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 21 இந்திய மீனவர்கள் இந்திய தூத்தரகத்தின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் ஆகஸ்ட் 3-ம் தேதி தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். #SushmaSwaraj
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X