search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- சி.பி.ஐ. அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜர்
    X

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- சி.பி.ஐ. அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜர்

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகம் முன்பு முதல் முறையாக ஆஜரானார். சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். #INXMediaCase #Chidambaram #CBI
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தார்.

    அப்போது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடியை முதலீடு செய்வதற்கு சட்ட விரோதமாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நடந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது.

    இதே போல ப.சிதம்பரத்துக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஜூலை 10-ந்தேதி வரை அவரை கைது செய்ய தடையை நீட்டித்து டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

    இதை தொடர்ந்து ப.சிதம்பரம் நேற்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு முதல் முறையாக ஆஜரானார். அவரிடம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். அவரது வாக்கு மூலமும் பதிவு செய்யப்பட்டது.

    அவர் 12-ந்தேதி ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பட்டுள்ளது.

    இதே போல ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கிலும் ப.சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. இந்த வழக்கிலும் அவரை ஜூலை 3-ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்தும், இடைக்கால ஜாமீன் வழங்கியும் டெல்லி ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது.

    இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகம் முன்பு முதல் முறையாக ஆஜரானார். சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்த போது விதிமுறைகளை மீறி ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ரூ.350 கோடி அந்நிய முதலீடு பெறுவதற்கு உதவி செய்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டி இருந்தது. அன்னிய முதலீடு அனுமதி தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை செய்தனர்.


    ஐஎன்எஸ் மீடியா வழக்கு தொடர்பாக கார்தி சிதம்பரம் ஏற்கனவே கைதாகி ஜாமீன் பெற்றுள்ளார்.

    இந்த வழக்கில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன இயக்குனர் இந்திராணி முகர்ஜி, செய்தி இயக்குனர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரும் தங்களது மகள் ஷீனா போராவை கொன்ற வழக்கில் தற்போது சிறையில் உள்ளனர். #INXMediaCase #Chidambaram  #CBI
    Next Story
    ×