என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![தலைமறைவாக உள்ள நீனுவின் தாய் ரஹானா, நீனு தலைமறைவாக உள்ள நீனுவின் தாய் ரஹானா, நீனு](https://img.maalaimalar.com/Articles/2018/Jun/201806011314571679_youth-honour-killing-5-persons-including-a-woman-absconding_SECVPF.gif)
X
தலைமறைவாக உள்ள நீனுவின் தாய் ரஹானா, நீனு
கேரளாவில் வாலிபர் கவுரவ கொலை: பெண் உள்பட 5 பேர் தலைமறைவு
By
மாலை மலர்1 Jun 2018 7:44 AM GMT (Updated: 1 Jun 2018 7:44 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கேரளாவில் வாலிபர் கவுரவ கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெண் உள்பட 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #honourkilling #kerala #lovemarriage
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள தென்மலா பகுதியைச் சேர்ந்த கெவின் ஜோசப் என்பவர் காரில் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
அதே பகுதியைச் சேர்ந்த நீனு என்ற பெண்ணை கெவின்ஜோசப் காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த நீனுவின் தந்தை சாக்கோ, சகோதரர் சானு மற்றும் உறவினர்கள் சேர்ந்து கூலிப்படை உதவியுடன் கெவின்ஜோசப்பை கவுரவ கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக சாக்கோ, சானு உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சாக்கோவின் மனைவி ரஹானா மற்றும் உறவினர்கள் ரமீஸ், ரசல், சானு, சினு ஆகிய 5 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கும் இந்த கொலையில் தொடர்பு உள்ளதால் அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
சாக்கோவும், சானுவும் கொலை நடந்தவுடன் ரஹானாவை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்து விட்ட தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து ரஹானாவை கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
பெங்களூரு, கோவா போன்ற பகுதிகளுக்கும் ரஹானாவை தேடி போலீஸ் படை சென்று உள்ளது. காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் ரஹானாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அவரது வீட்டுக்கு போலீசார் சென்று சோதனை நடத்தினார்கள். ஆனால் அங்கு அவர் இல்லை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மேலும் ரஹானாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் அவர் தலைமறைவாக இருக்க உதவி செய்து வருவதாகவும், போலீசார் பற்றிய தகவல்களையும் அவர் உடனுக்குடன் ரஹானாவுக்கு தெரிவிப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அந்த உறவினர் உள்பட சிலரையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.
இதற்கிடையில் கெவின் ஜோசப் கொலையில் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட உதவி சப்-இன்ஸ்பெக்டர் பிஜூ, ஏட்டு அஜய்குமார் ஆகியோர் ஏற்றுமானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #honourkilling #kerala #lovemarriage
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள தென்மலா பகுதியைச் சேர்ந்த கெவின் ஜோசப் என்பவர் காரில் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
அதே பகுதியைச் சேர்ந்த நீனு என்ற பெண்ணை கெவின்ஜோசப் காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த நீனுவின் தந்தை சாக்கோ, சகோதரர் சானு மற்றும் உறவினர்கள் சேர்ந்து கூலிப்படை உதவியுடன் கெவின்ஜோசப்பை கவுரவ கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக சாக்கோ, சானு உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சாக்கோவின் மனைவி ரஹானா மற்றும் உறவினர்கள் ரமீஸ், ரசல், சானு, சினு ஆகிய 5 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கும் இந்த கொலையில் தொடர்பு உள்ளதால் அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
சாக்கோவும், சானுவும் கொலை நடந்தவுடன் ரஹானாவை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்து விட்ட தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து ரஹானாவை கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
பெங்களூரு, கோவா போன்ற பகுதிகளுக்கும் ரஹானாவை தேடி போலீஸ் படை சென்று உள்ளது. காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் ரஹானாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அவரது வீட்டுக்கு போலீசார் சென்று சோதனை நடத்தினார்கள். ஆனால் அங்கு அவர் இல்லை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மேலும் ரஹானாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் அவர் தலைமறைவாக இருக்க உதவி செய்து வருவதாகவும், போலீசார் பற்றிய தகவல்களையும் அவர் உடனுக்குடன் ரஹானாவுக்கு தெரிவிப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அந்த உறவினர் உள்பட சிலரையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.
இதற்கிடையில் கெவின் ஜோசப் கொலையில் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட உதவி சப்-இன்ஸ்பெக்டர் பிஜூ, ஏட்டு அஜய்குமார் ஆகியோர் ஏற்றுமானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #honourkilling #kerala #lovemarriage
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)