search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல் விலையை ரூ. 1 குறைக்க கேரள அரசு முடிவு
    X

    பெட்ரோல், டீசல் விலையை ரூ. 1 குறைக்க கேரள அரசு முடிவு

    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் திண்டாடி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையை ஒரு ரூபாய் குறைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த காரணத்தினால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத உயர்வைச் சந்தித்தது. தற்போது நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி நிர்ணயித்து வரும் நிலையில் கா்நாடகா சட்டசபை தோ்தலுக்கு பின்னா் பெட்ரோல், விலை கடுமையாக உயா்ந்து வருகிறது. தொடர்ந்து 16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்தது.

    இந்நிலையில் 16 நாட்களுக்கு பின்னர் இன்று பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டது. சென்னையில் வெறும் ஒரு பைசா விலை குறைக்கப்பட்ட பெட்ரோல் லிட்டருக்கு 81.42 ரூபாய்க்கு இன்று விற்கப்படுகிறது. டீசலும் ஒரு பைசா விலை குறைக்கப்பட்டு 73.17 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் திண்டாடி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையை ஒரு ரூபாய் குறைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை முதல் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் குறைக்கப்படும் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    எரிபொருள் மீதான மாநில அரசு வரியை கேரளா குறைக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கேரளாவில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், வரி எத்தனை சதவீதம் குறைக்கப்பட உள்ளது என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

    கடந்த நவம்பர் 2017 நிலவரப்படி, டீசல் மீது 24.52 சதவீதமும், பெட்ரோல் மீது 31.8 சதவீதம் வரியும் கேரளா வசூல் செய்கிறது. இவை போக கூடுதலாக ஒரு சதவீத செஸ் வரியும் கேரளாவில் வசூலிக்கப்படுகிறது. 2017-2018 நிதி ஆண்டில் எரிபொருட்கள் வரி மூலம் கேரள அரசு ரூ 7,795 கோடியை வருவாயை ஈட்டியதாக தகவல்கள் கூறுகின்றன. #Petrol #Diesel #PetrolPrice
    Next Story
    ×