என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி - துணை ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து
Byமாலை மலர்18 Oct 2017 1:54 PM GMT (Updated: 18 Oct 2017 1:54 PM GMT)
தீபாவளி திருநாளையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு ஆகியோர் நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
தீபாவளி திருநாளையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு ஆகியோர் நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியாகவும், தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியாகவும், அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றியாகவும் போற்றப்படும் இந்த தீபாவளி பண்டிகையை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் கொண்டாடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
பிறரது வாழ்விலும் பேரின்பம் மற்றும் வளமை ஒளிரவும், தேவைகளை எதிர்பார்க்கும் பிறருடன் நமது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளவும் முன்வருவோம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்த தீபாவளி பண்டிகை ஸ்ரீராமரின் உயரிய அருங்குணங்களின்பால் நம்மை ஊக்குவிக்கும் திருநாளாக அமையட்டும் என தெரிவித்துள்ளார்.
மக்களிடையே அன்பையும், ஒருமைப்பாட்டையும் ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றும் இந்த தீபாவளி திருநாள் நமது வாழ்வில் ஒளியையூட்டுவதுடன், அமைதி, வளங்கள் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளி திருநாளையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு ஆகியோர் நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியாகவும், தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியாகவும், அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றியாகவும் போற்றப்படும் இந்த தீபாவளி பண்டிகையை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் கொண்டாடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
பிறரது வாழ்விலும் பேரின்பம் மற்றும் வளமை ஒளிரவும், தேவைகளை எதிர்பார்க்கும் பிறருடன் நமது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளவும் முன்வருவோம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்த தீபாவளி பண்டிகை ஸ்ரீராமரின் உயரிய அருங்குணங்களின்பால் நம்மை ஊக்குவிக்கும் திருநாளாக அமையட்டும் என தெரிவித்துள்ளார்.
மக்களிடையே அன்பையும், ஒருமைப்பாட்டையும் ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றும் இந்த தீபாவளி திருநாள் நமது வாழ்வில் ஒளியையூட்டுவதுடன், அமைதி, வளங்கள் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X