என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
உ.பி.: சாலை விபத்துகளில் 9 பேர் பலி
Byமாலை மலர்15 Oct 2017 12:37 PM GMT (Updated: 15 Oct 2017 12:37 PM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்த சாலை விபத்துகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 9 பேர் பலியாகினர்.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள இந்திரா நகரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அருகிலுள்ள கோயிலுக்கு செல்வதற்காக இன்று காலை காரில் சென்று கொண்டிருந்தனர். லக்னோ - ரேபரேலி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து கார் சாலை தடுப்பை மீறி எதிரில் வந்த லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் நேற்று இரவு மீரட் - கர்னால் நெடுஞ்சாலையில் பைக்கில் சென்ற குடும்பத்தினர் மீது டிராக்டர் மோதியது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற கணவன், மனைவி மற்றும் அவர்களது மகள் ஆகியோர் உயிரிழந்தனர்.
சாலை விபத்துக்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள இந்திரா நகரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அருகிலுள்ள கோயிலுக்கு செல்வதற்காக இன்று காலை காரில் சென்று கொண்டிருந்தனர். லக்னோ - ரேபரேலி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து கார் சாலை தடுப்பை மீறி எதிரில் வந்த லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் நேற்று இரவு மீரட் - கர்னால் நெடுஞ்சாலையில் பைக்கில் சென்ற குடும்பத்தினர் மீது டிராக்டர் மோதியது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற கணவன், மனைவி மற்றும் அவர்களது மகள் ஆகியோர் உயிரிழந்தனர்.
சாலை விபத்துக்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X