search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் பகுதியில் மது விற்றவரை தட்டி கேட்ட  போலீசாருக்கு கொலை மிரட்டல்-வாலிபர் கைது
    X

    சங்கரன்கோவில் பகுதியில் மது விற்றவரை தட்டி கேட்ட போலீசாருக்கு கொலை மிரட்டல்-வாலிபர் கைது

    • ராமசாமிபுரம் பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
    • எட்வின், போலீசாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் சங்கரன்கோவில் டி.எஸ்.பி. சுதீர், சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் விற்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

    இந்நிலையில் சங்கரன்கோவில் அருகே ராமசாமிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கற்பகராஜா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு சட்ட விரோதமாக மது விற்று கொண்டிருந்த சங்குபுரம் பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி மகன் எட்வின் (வயது 20) என்பவரை சோதனை செய்த போது, அவர் போலீசாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×