என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மீன் பிடிக்க புழு எடுக்க சென்றபோது மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி
- வி.கே.புரம் அருகே மீன் பிடிக்க புழு எடுக்க சென்றபோது மின்வேலியில் சிக்கி தொழிலாளி ஒருவர் பலியானார்.
- இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
வி.கே.புரம் அருகே உள்ள திருப்பதியாபுரம் படித்துறை தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன்(வயது 48). இவர் நூற்பாலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலையில் இவர் அங்குள்ள வயல்வெளி அருகில் சென்றார். சிறிது நேரத்தில் அவர் இறந்த நிலையில் அங்கு விழுந்து கிடந்தார். இதுதொடர்பாக தகவல் அறிந்த வி.கே.புரம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.சங்கரநாராயணன் நேற்று ஆற்றில் மீன் பிடிப்பதற்காக அதன் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்று புழுக்களை எடுக்க சென்றுள்ளார்.
அங்கு தோட்டத்திற்குள் காட்டு விலங்குகள் வராமல் இருப்பதற்காக அதன் உரிமையாளர் மின்வேலி போட்டுள்ளார். அதில் சங்கரநாராயணன் கவனிக்காமல் மிதித்துவிட்டார்.
அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது. இதுதொட ர்பாக தோட்டத்தின் உரிமையாளரான திருப்பதியாபுரத்தை சேர்ந்த நம்பிவேல் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்